search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரவலாக மழை"

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வீரகனூர், ஆத்தூர், ஏற்காடு, தலைவாசல், சேலம், ஓமலூர், தம்மம்பட்டி, சங்ககிரி, கெங்கவல்லி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக சேலம், ஆத்தூர், கெங்கவல்லி, சங்ககிரி, தலைவாசல், வீரகனூர், கரிய கோவில், எடப்பாடி, ஓமலூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    62.60 மி.மீ மழை பதிவு

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தலைவாசலில் அதிகபட்சமாக 16 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தலைவாசல் - 16 மி.மீ, வீரகனூர் - 9, சங்ககிரி - 7.4, தம்மம்பட்டி - 6, ஏற்காடு - 5, கரியகோவில் - 4, பெத்தநாயக்கன் பாளையம் - 3, ஆத்தூர்-2.4, கெங்கவல்லி- 2.2, ஓமலூர்- 2, எடப்பாடி- 2, ஆணைமடுவு - 2 சேலம்-1.6 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 62.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, காக்காவேரி உள்பட பல பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் திடீரென மழை பெய்தது. மதியம் 3 மணிக்கு தொடங்கிய மழை, மாலை 5 மணி வரை பெய்து கொண்டிருந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று அதிகாலையும் நாமக்கல் நகரில் பரவலாக மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சாரல் மழையால், நாமக்கல் நகரில் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவி வருகிறது.

    வியாபாரிகள் பாதிப்பு

    பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, ஓலப்பாளையம், மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், குன்னத்தூர், ஆனங்கூர், வடகரையாத்தூர், இருக்கூர், பெரியசோளிபாளையம், தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறு நல்லிகோவில், கொத்தமங்கலம், குரும்பல மகாதேவி, ஜமீன்எளம்பள்ளி, சோழசிராமணி, சுள்ளிப்பா ளையம், பெருங்குறிச்சி, குப்பரிக்காபாளையம், கந்தம்பாளையம், மணியனூர், நல்லூர், கூடச்சேரி, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் 12 மணி முதல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    பின்னர் வேகமாக பெய்ய தொடங்கிய மழை, விட்டு விட்டு இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக சாலைகளில்

    வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலை யோரம் போடப்பட்டிருந்த பழக்கடைகள், பலகார கடைகள், டிபன் கடைகள், பூக்கடைகள், ஜவுளிக்கடைகள், மண்பாண்டம் கடைகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். திடீரென மழை பெய்ததால், இருசக்கர வாகனங்கள், நடந்து செல்வோர் நனைந்தபடியே சென்றனர். 

    • டிசம்பர் 8 ந்தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
    • நேற்று முழுவதும் பெய்து வந்த நிலையில் சிறிது நேரம் வெயில் அடித்தும், சில மணி நேரம் கன மழை பெய்து வந்தது.

    கடலூர்:

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது. மேலும் டிசம்பர் 8 ந்தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளது . புயலாக மாறும் பட்சத்தில் புயலுக்கு மாண்டஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

    இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக விடிய விடிய மழை பெய்து வந்தது. இதில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாச்சலம், வேப்பூர், சேத்தியாத்தோப்பு, வானமாதேவி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், அண்ணாமலை நகர், காட்டு மயிலூர், தொழுதூர், வடக்குத்து உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மழை பெய்து வந்தது.

    இந்த மழை நேற்று முழுவதும் பெய்து வந்த நிலையில் சிறிது நேரம் வெயில் அடித்தும்,  சில மணி நேரம் கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தற்போது குறைந்த அளவில் தண்ணீர் தேங்கி வருகின்றது. மேலும் மாவட்டம் முழுவதும் மழைநீர் சூழும் பகுதியும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் காலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடனும், அதன் பிறகு சுட்டெரிக்கும் வெயிலும் இதற்கிடையில் கனமழையும் அதிகாலையில் பணிபொழிவும் மாலையில் குளிர்ந்த காற்று என தொடர்ந்து சீதோசன மாற்றம் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு-

    காட்டுமன்னார்கோயில் - 78.2, லால்பேட்டை - 55.0,அண்ணாமலைநகர் - 45.0,கடலூர் - 38.4, கொத்தவாச்சேரி - 38.0, ஸ்ரீமுஷ்ணம் - 33.2,சிதம்பரம் - 30.2,கலெக்டர் அலுவலகம் - 27.9, பரங்கிப்பேட்டை - 25.2, புவனகிரி - 25.0, பெல்லாந்துறை - 24.2, குறிஞ்சிப்பாடி - 24.0, வானமாதேவி - 21.8, சேத்தியாத்தோப்பு - 21.6, குப்பநத்தம் - 20.0, கீழ்செருவாய் - 18, பண்ருட்டி - 18.0, எஸ்ஆர்சி குடிதாங்கி - 17.5, வேப்பூர் - 17.0, விருத்தாசலம் - 16.5, தொழுதூர் - 15.0, காட்டுமயிலூர் - 13.0, லக்கூர் - 7.4, வடக்குத்து - 6.0, மீ-மாத்தூர் - 5.0,என மொத்தம் - 641.10 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது ‌

    • சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • அதிகபட்சமாக ஆத்தூரில் 28.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழையால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம்:

    வடகிழக்கு பருவ மழையொட்டி சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வீர கனூர், ஆத்தூர், ஏற்காடு, தலைவாசல், சேலம், ஓமலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

    வெயில் வாட்டியது

    இந்த நிலையில் நேற்று காலையில் வெயில்

    வாட்டி வதைத்த நிலையில்,

    மாலையில் வானம் மேக

    மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக ஆத்தூர், கெங்க

    வல்லி, சங்ககிரி, தலைவா சல், வீரகனூர், கரிய கோவில் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மழை நீருடன் சாக்கடைநீர் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக ஆத்தூரில் 28.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழையால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஆத்தூர்-28.6 மி.மீ, கெங்கவல்லி- 22, சங்ககிரி - 20, தலைவாசல் - 17, சேலம் - 7.1, வீரகனூர் - 7, கரிய கோவில் - 4 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 105.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ராசிபுரம், புதுச்சத்திரம் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதே போல எருமைப்பட்டி, பரமத்தி வேலூர், நாமக்கல் நகர பகுதிகளிலும் லேசான சாரல் மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்ச மாக ராசிபுரத்தில் 19.3

    மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. புதுச்சத்திரம்-10, பரமத்தி-3, நாமக்கல்-1.5, எருமப்பட்டி-2 என மாவட்டம் முழுவதும் 35.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    32 ஏரிகள் நிரம்பின

    நாமக்கல் மாவட்டத்தில் 32 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 8 ஏரிகள் 75 சதவீதமும், 4 ஏரிகள் 50 சதவீதமும், 6 ஏரிகள் 25 சதவீதமும், 7 ஏரிகளில் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. 22 ஏரிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. அந்த ஏரிகளிலும் தண்ணீர் நிரம்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழை பெய்து வந்தது.

    கடலூர்:

    வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்க உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை காரணமாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, குறிஞ்சிப்பாடி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் மீண்டும் மழை பெய்யும். இந்த நிலையில் நேற்று கடலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி பண்ருட்டி பரங்கிப்பேட்டை எஸ் ஆர் சி குடித்தாங்கி வடக்குத்து மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது இதனை தொடர்ந்து லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடை பிடித்து படியும், வாகனத்தில் சென்றவர்கள் மழையில் நனைந்த படியும் சென்றதை காண முடிந்தது. மேலும் இந்த மழை நேற்று இரவு தொடங்கி அதிகாலைவரை மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் வெயில் அடித்து வருகிறது.கடலூர் மாவட்டத்தில் மில்லி மீட்டர் அளவில் மழை அளவு பின்வருமாறு- எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 5.0,குறிஞ்சிப்பாடி - 5.0,கடலூர் - 3.2, பண்ருட்டி - 3.0,பெல்லாந்துறை - 3.0,கலெக்டர் அலுவலகம் - 2.2,வடகுத்து - 1.0,8. பரங்கிப்பேட்டை - 0.,4மொத்தம் - 22.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

    • மீனவர்கள் உடனே கரை திரும்பவேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
    • துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கடலூர், நவ.22-

    வங்ககடலில் குறைந்த காற்றழுத்தம் வலுவிழந்து ள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் சுமார் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவ ர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். நெடுங்கடல் தூரத்தில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனே கரை திரும்பவேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் மீன்வளத்து றை அதிகாரிகள் 49 மீனவ கிராமங்களுக்கும் எச்சரி க்கை அறிவிப்பு விடுத்து ள்ளனர். இதனைத்தொ டர்ந்து கடலூர் மாவட்ட த்தில் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று காலை யும் அவர்கள் வீட்டி லேயே முடங்கினர். இதனால் துறைமுக பகுதி யில் படகுகள் ஓய்வெடு த்தன. வானிலை ஆய்வு மையம் அறிவித்தப்படி கடலில் சீற்றம் அதிகம் உள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை அறிவித்தப்படி இன்று காலை முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கடலூர் நகர் பகுதியான திருப்பாதிரிபுலியூர், மஞ்ச க்குப்பம், செம்மண்டலம், பாதிரிகுப்பம், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அலு வலகம், பள்ளிக்கு செல்வோர் குடைபிடித்தப்படி சென்றதை காண முடிந்தது.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
    • நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

    வேலூர்:

    தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    பரவலாக மழை

    வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மாவட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மற்ற வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி முதல் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வரையிலும் சென்னை பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது.பகலிலும் வாகனங்கள் விளக்கை போட்டபடி சென்றன.மேலும் கடும் குளிரும் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி யுள்ளனர்.

    கண்காணிப்பு மையம்

    கலெக்டர் அலுவல கங்களில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் மழை பாதிப்பு குறித்து இந்த அலுவலகம் மற்றும் அருகில் உள்ள தாலுகா அலுவலகங்களில் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

    தண்ணீர் தேங்க கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு பொதுமக்களை தங்க வைப்பதற்கான பள்ளி, சமுதாய கூடங்களும் தயார் நிலையில் உள்ளன.

    பாலாறு, பொன்னை ஆறு, கவுண்டன்யா ஆறு மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை, செய்யாறு, ஆரணி ஆறு, நாகநதி ஆறுகளிலும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த ஆறுகளில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளன. மழை வெள்ளம் எப்போது வேண்டுமானாலும் பெருக்கெடுத்து வரலாம் என்பதால் பொதுமக்கள் ஆறு மற்றும் நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
    • மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், குமராட்சி, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி ,குள்ளஞ்சாவடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பெரும்பாலான விளைநிலங்களில் தண்ணீர் வடியாமல் பயிர்கள் அழுகி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    நேற்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் புவனகிரி சேத்தியாத்தோப்பு காட்டுமன்னார்கோவில் பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி கடலூர் தொழுதூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனை தொடர்ந்து நேற்று தொடர் மழை காரணமாக ஒரு குடிசை வீடும் மற்றும் 4 கால்நடைகளும் இறந்துள்ளன இது மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் முக்கியசாலைகள் அனைத்தும் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் வங்கக்கடலில் வருகிற 9 -ந் தேதி உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    எனவே கடலூர் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில் தொடர் மழை பெய்தால் தண்ணீர் வெளியேற்றும் நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:- புவனகிரி - 27.0, சேத்தியாதோப்பு- 20.4, அண்ணாமலைநகர் - 16.0, கீழ்செருவாய் - 13.0, காட்டுமன்னார்கோயில் - 12.0,பெல்லாந்துறை - 9.2, சிதம்பரம் - 7.0, லால்பேட்டை - 6.0, பரங்கிப்பேட்டை - 5.6, . குறிஞ்சிப்பாடி - 5.0, தொழுதூர் - 4.0, கொத்தவாச்சேரி - 3.0, ஸ்ரீமுஷ்ணம் - 2.1 , கலெக்டர் அலுவலகம் - 0.8, கடலூர் - 0.7 மொத்தம் - 131.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
    • தண்டராம்பட்டில் அதிகபட்சமாக 40 மில்லி மீட்டர் கொட்டியது

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை நகரப் பகுதியில் மேகம் மந்தமாக காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது.செங்கம், செய்யாறு, போளூர், ஆரணி வந்தவாசி பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மற்ற இடங்களில் சாரல் மழை பெய்தது அதிகபட்சமாக தண்டராம்பட்டில் 40 மில்லி மீட்டர் மழை பெய்தது. இன்று காலையில் பல இடங்களில் மேகம் மந்தமாக காணப்பட்டது.

    மழை காரணமாக குளிர்ந்த காற்றும், குளிர்ச்சியான சீதோஷண நிலை காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பரவலாக மழை பெய்து வருவதால் ஏரி குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:

    திருவண்ணாமலை-3.1, ஆரணி-20.6, செய்யாறு-35.8, செங்கம்-35.8, ஜமுனாமரத்தூர்-15, வந்தவாசி-12.2, போளூர்-25.6, தண்டராம்பட்டு-41, கலசபாக்கம்-7, சேத்துப்பட்டு-1.2, கீழ்பென்னாத்தூர்-10.8, வெம்பாக்கம்-6.

    • கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது .

    கன மழை

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் கன மழை பெய்தது. சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து ஆறாக ஓடியது.

    சேலத்தில் திடீரென பெய்த இந்த கன மழையால் பெரமனூர் நாராயண பிள்ளை தெரு, பச்சப்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம் நாராயணநகர் உள்பட பல பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இேத போல சேலம் மாவட்டம் ஓமலூர், ஆத்தூர், எடப்பாடி, சங்ககிரி உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது . இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகளில் எ ங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

    442.7 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 67.4 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் 63, ஆத்தூர் 58.2, எடப்பாடி 53, சங்ககிரி 51, பெத்த நாயக்கன்பாளையம் 28.5, தம்மம்பட்டி 25.4, கரியகோவில் 22, கெங்கவல்லி 20, வீரகனூர் 18, ஏற்காடு 11, காடையாம்பட்டி 10, மேட்டூர் 9.2, ஆனைமடுவு 6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 442.7 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • விழுப்புரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சுற்றி அதிகாலை முதலே வானில் கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழ்நிலை ஏற்பட்டது.
    • வயல்வெளிகளில் பயிர் செய்துள்ள நெல் மணிலா, மரவள்ளி கிழங்கு போன்ற பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலநிலை நிலவுவதை ஒட்டி ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வந்த வண்ணம் உள்ளது. இந்த மழை விழுப்புரம் மாவட்ட மற்றும் விழுப்புரத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் பெய்து வருகிறது. 

    விழுப்புரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சுற்றி அதிகாலை முதலே வானில் கருமேகங்கள் சூழ்ந்து இதமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை எடுத்து மழை பெய்யத் தொடங்கி தொடர்ந்து பெய்த வண்ணம் உள்ளது. இதனால் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். இந்த மழை விழுப்புரம் பெரும்பாக்கம் காணை, மாம்பழப்பட்டு, அய்யூர், அகரம், சிந்தாமணி, முண்டியம்பாக்கம், இருவேல்பட்டு, அரசூர், சாலையாகரம், இணங்காடு, செங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது.

    இதே போன்று மரக்காணம் பகுதிகளில் காலை 6 மணி முதல் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வயல்வெளிகளில் பயிர் செய்துள்ள நெல் மணிலா, மரவள்ளி கிழங்கு போன்ற பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் காலை முதல் பெய்த கன மழையால் மத்திய மாநில அரசுக்கு சொந்தமான உப்பள பகுதிகளில் சுமார் 3500 ஏக்கர் நீரில் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து விட்டுவிட்டு பெய்து வரும் இந்த மழையினால் 2 மாதங்களாக உப்பல பகுதிகளில் உப்பு உற்பத்தி நடைபெறவில்லை. இதனால் 5000 -க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் வேலையின்றி பாதிப்படைந்துள்ளனர்.

    மேலும் இந்த மழை மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஆலத்தூர், கந்தாடு, வண்டி பாளையம், நடுக்குப்பம், அனுமந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த வண்ணம் உள்ளது

    • கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்தது.
    • செடிகள் அழுகும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    கடலூர்:

    தெற்கு ஆந்திரா பகுதியில் மேல்வளி மண்டல சுழற்றி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பரவலாக 2 நாட்கள் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்தது. நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையும் மழை நீடித்தது.

    கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி, திருவந்திபுரம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மழை கொட்டியது.  கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழையையொட்டி நெல் நாற்றங்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மழை விவசாயத்துக்கு ஏற்றதாக உள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஊடு பயிராக பயிரிட்டுள்ள செடிகளுக்கு இந்த மழை உகந்ததாக இல்லை என்றும், இதனால் செடிகள் அழுகும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை பற்றி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகா ரிகள் தீவிரமடைந்துள்ளனர்

    • சேலம் மாநகரத்தில் பல்வேறு பகுதி களில் மழை பெய்தது.
    • இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர்தேங்கியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்கங்கே மழை பெய்து

    வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. சேலம் மாநகரத்தில் பழைய பஸ்நிலையம், அம்மா பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்ட லாம்பட்டி, ஜங்ஷன், 4 ரோடு, செவ்வாய்ப்பேட்டை உள்பட பல்வேறு பகுதி களில் மழை பெய்தது. இதில் மழையில் சாக்கடை நீருடன் மழைநீருடன் கலந்து கால்வாயில் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் மாவட்டத்தில் காடையாம்பட்டி, எடப்பாடி,மேட்டூர், ஒமலூர், கெங்கவல்லி, ஆத்தூர், ஆகிய பகுதி களில் பலத்தமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர்தேங்கியது.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- ஓமலூர்- 11.2 மி.மீ, மேட்டூர் - 6.2, காடையாம்பட்டி- 6, சேலம்- 5.8, கெங்கவல்லி - 4, எடப்பாடி-1.2, ஆத்தூர்-1 மீ.மீ மழை பதிவாகி உள்ளது.

    ×